0 of 123 Questions completed
Questions:
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading…
You must sign in or sign up to start the quiz.
You must first complete the following:
0 of 123 Questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 point(s), (0)
Earned Point(s): 0 of 0, (0)
0 Essay(s) Pending (Possible Point(s): 0)
Average score |
|
Your score |
|
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
1) ‘பண்பாடு’ என்பதன் வேர்ச்சொல் என்ன?
2) ‘பண்பாடு’ என்ற சொல்லைத் தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர் யார்?
3) ‘உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே’ என்று கூறும் நூல் எது?
4) ‘பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்’ என்று குறிப்பிடும் நூல்?
5) “பண்பு உடையார்ப் பட்டுஉண்டு உலகம்” என்று கூறும் நூல் எது?
6) சரியான விடையைத் தேர்வு செய்க.
7) கூற்று: நாகரிகம் என்பது, மாந்தரது புறத்தோற்ற வளர்ச்சியின் செம்மையைக் குறிக்கிறது.
காரணம்: மாந்தன் தன் அறிவுத்திறனாலும், ஆற்றல் திறனாலும் சுவையான உணவு, அழகிய ஆடை, கல்விச்சாலைகள் வளர்ந்து நிற்கும் வாணிகம் போன்றவற்றை வளர்த்து வருகிறான்.
8) சரியான கூற்றைத் தேர்க
9) தமிழரின் தோற்றம் பற்றி எத்தனை வகையான கருதுகோள்கள் உள்ளன?
10) தமிழர்கள், தொன்றுதொட்டுப் பண்பாட்டில் சிறந்து விளங்கினர் என்பதற்கான சான்று எது?
11) தமிழக் பண்பாட்டின் தொன்மையை அறிய பெரிதும் துணை புரிபவை எவை?
12) எந்த நூலின் பொருளதிகாரம் பழந்தமிழரின் அக, புற வாழ்க்கை முறைகளைப் பற்றிக் கூறுகிறது?
13) சங்க இலக்கியங்கள் எதை “அன்பின் ஐந்திணையாக” பகுத்துள்ளன?
14) அன்பின் ஐந்திணைகளைக் கொண்டு பொருத்துக
அ. முதற்பொருள் – 1. தெய்வம், வழிபாட்டு முறை, வாழ்க்கைமுறை
ஆ. கருப்பொருள் – 2. காதல் வாழ்வு மற்றும் பல்வேறு உணர்வு நிலைகள்
இ. உரிப்பொருள் – 3. நிலம், பொழுது
15) “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு எடுத்துக் கூறிய பெருமை யாரைச் சேரும்?
16) சேர மன்னர்களின் வணிகமுறை, ஆட்சிச் சிறப்பு பற்றி கூறும் நூல் எது?
17) மதுரையின் சிறப்பைப் பற்றி கூறும் நூல் எது?
18) பத்துப்பாட்டில் எத்தனை நூல்கள் ஆற்றுப்படை நூல்கள்?
19) “ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்” என்று குறிப்பிடுபவர் யார்?
20) “தம்மைப் போன்று வறுமையில் வாடும் பிறரும் வளம் பெற்று வாழ்வதற்கான வழிமுறைகளைக் கூறுகின்ற பெருமனம் படைத்தவர்கள் புலவர்கள்” என்று கூறும் நூல் எது?
21) பொருத்துக.
அ. குறிஞ்சிப்பாட்டு – 1. காதலின் சிறப்பு
ஆ முல்லைப்பாட்டு – 2. நிலவளம்
இ. நெடுநல்வாடை – 3. பாண்டியன் நெடுஞ்செழியன்
ஈ. மதுரைக் காஞ்சி – 4. காதல், வீரம்
22) “நிலையாமை” குறித்த கருத்துகள் இடம் பெற்ற நூல் எது?
23) “முட்டாச் சிறப்பின் பட்டினம்” என்ற சொற்றொடர் இடம்பெற்ற நூல் எது?
24) இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான எது தமிழர் ஆட்சிமுறை, ஆடல், பாடல், கலைவளம் பற்றிக் கூறுகிறது?
25) எது சமய அறக்கருத்துக்களையும் வாழ்வியல் நெறிகளையும் எடுத்துரைக்கிறது?
26) “குற்றங்களுக்கான காரணத்தை ஆராய்வதன் மூலமே குற்றச்செயலைத் தடுக்க முடியும்” என்பதை மையக் கருத்தாகக் கொண்ட நூல் எது?
27) கிரேக்க மக்கள் நாகரீக சமூகத்தில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே, எகிப்தும் பண்டைய இந்தியாவும் நெடுங்காலமாக வணிகத் தொடர்பு கொண்டிருந்தன எனக் கூறும் நூல் எது?
28) பண்டைய தமிழகத்தின் கடல் வணிகம் பற்றிக் குறிப்படும் நூல் எது?
29) கண்ணனூருக்கும் கொச்சிக்கும் இடையில் யாருடைய துறைமுகங்கள் அனைத்தும் அமைந்திருந்தன?
30) எந்த நூற்றாண்டு முதல் கிரேக்கர்கள், தமிழகத்தின் வணித் தொடர்பு கொண்டிருந்தனர்?
31) தமிழ்ச்சொல்லுக்கு இணையான கிரேக்க சொல்லைப் பொருத்துக
அ. அரிசி – 1. பெரிப்பெரி
ஆ. கருவா – 2. சின்ஞிபேராஸ்
இ. இஞ்சிவேர் – 3. கார்ப்பியன்
ஈ. பிப்பாலி – 4. அரிஸா
32) “துகிம்” என்பதன் பொருள் என்ன?
33) தமிழத்திலிருந்து அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட மிருகங்களில் எது தரத்தில் மேலானவை எனப் போற்றப்பட்டன?
34) பொருத்துக
அ. தொண்டி – 1. கொமாரி
ஈ. முசிறி – 2. பகரி
இ. பொற்காடு – 3. முஸிரிஸ்
ஈ. குமரி – 4. திண்டிஸ்
35) பொருத்துக.
அ. கொற்கை – 1. கமரா
ஆ. நாகபட்டினம் – 2. கொல்சாய்
இ. காவிரிபூம்பட்டினம் – 3. நிகாமா
36) பொருத்துக
அ. புதுச்சேரி – 1. மசோலியா
ஆ. மரக்காணம் – 2. சோபட்மா
இ. மசூலிப்பட்டினம் – 3. பொதுகே
37) ஹிப்பாகிரேட்டஸ் எந்த பொருளை “இந்திய மருந்து” என்று குறிப்பிட்டார்?
38) தொல்பொருள் சான்றுகள் எத்தனை வகைப்படும்?
39) சரியான கூற்றைத் தேர்க
40) காஞ்சி கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளில் யாருடைய வரலாற்றை அறிய முடியும்?
41) கிராம ஆட்சிமுறையை தெளிவாக எடுத்துகாட்டும் கல்வெட்டு எது?
42) குடவோலை முறை தேர்தல் யாருடைய ஆட்சியில் நடைபெற்றது?
43) எந்த இடங்களில் காணப்படும் கோயில் கல்வெட்டுகள் மக்களின் பண்பாடு, அரசில், சமூக உறவு போன்றவற்றை எடுத்துரைக்கிறது?
44) பட்டயங்கள் பொதுவாக எந்த மொழயில் காணப்படுகின்றன?
45) தளவாயப்புரச்செப்பேடு, சின்னமனூர்ச் சாசனம், சிவகாசிச் செப்பேடு ஆகியவை யாருடைய காலப் பட்டயங்கள்?
46) திருவாலங்காட்டுப் பட்டயங்கள் யாருடைய காலத்தவை?
47) மன்னர்கள் கொடையாக வழங்கிய இறையிலி நிலங்களையும் அவற்றைப் பெற்றுக் கொண்டவர்களைப் பற்றியும் கூறுபவை எவை?
48) சங்க காலத்தில் செப்பு நாணயங்கள் வழக்கில் இருந்தன. அவற்றின் ஒருபுறம் யானையும் மறுபுறம் எதுவும் காணப்பட்டது?
49) யவனர்கள் தமிழகத்தில் எந்த இடத்திலிருந்து தங்க நாணயங்களை வெளியிட்டனர்?
50) யாருடைய காலத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் இரட்டை மீன் கப்பல், நந்தி போன்ற சின்னங்கள் காணப்படுகின்றன?
51) யார், பாண்டியர்களை அடக்கி வலிமை பெற்றவராக வாழ்ந்தார் என்பதற்கு சான்றாக நாணயம் உள்ளது?
52) யாரடைய தங்க நாணயம் கிரந்த எழுத்தில் அவனுடைய பெயருடன் காணப்படுகிறது?
53) மண்டகப்பட்டு கல்வெட்டு யாருடையது?
54) யாருடைய காலம் முதற்கொண்டு கோயில்கள் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டன?
55) வீரம், கொடை, புலமை, முதலியவற்றில் சிறந்தவர்களை நினைவுகூறும் பொருட்டு நடப்பட்டவை எவை?
56) தமிழகத்தின் சிறப்பான சிற்பக்கலைக்கு அடையாளமாகத் திகழுவது எது?
57) “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்லுலகத்தை” இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
58) குறிஞ்சியும் முல்லையும் முறைமையில் திரிந்த நிலம் எவ்வாறு அழைக்கப்படும்?
59) பண்டையத் தமிழகத்தில் இருந்த அரசியல் பிரிவுகள் எவை?
60) மன்னர்களுக்கும், மக்களுக்கும் உரிய ஒழுக்கங்கள் எந்த நூலில் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது?
61) “வினையே ஆடவர்க்கு உயிரே” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
62) தமிழ் வளர்த்த சங்கங்கள் எத்தனை?
63) பொருத்துக.
அ. முதற்சங்கம் – 1. இன்றைய மதுரை
ஆ. இடைச்சங்கம் – 2. கபாடபுரம்
இ. கடைச்சங்கம் – 3. தென்மதுரை
64) சங்க இலக்கியமாகிய எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் எத்தiயாவது தமிழ்ச்சங்ககால நூல்கள்?
65) சங்கங்களைப் பற்றிய வரலாறு, இறையனார் களவியல் உரையில் கூறப்பட்டுள்ளது. இதனை எழுதியவர் யார்?
66) தமிழர்கள், தம் வாழ்க்கையை எத்தனை கூறுகளாகப் பிரித்தனர்?
67) அகத்திணை எத்தனை வகைப்படும்?
68) புற ஒழுக்கம் எத்தனை வகைப்படும்?
69) அகத்திணை, புறத்திணை சார்ந்த செய்திகளை விரிவாக விளக்கும் நூல் எது?
70) எப்பொருளாகிய காதலைக் கற்பனை செய்து பாடும்போது அதற்குரிய நிலம், பொழுது, பறவை, விலங்கு, பூ, மரம் முதலான கருப்பொருள்களைப் பிண்னணியாக அமைத்துப் பாடுவது மரபு?
71) பொருத்துக
அ. குறிஞ்சி – 1. மணலும் மணல் சார்ந்த இடம்
ஆ. முல்லை – 2. வயலும் வயல் சார்ந்த இடம்
இ. மருதம் – 3. கடலும் கடல் சார்ந்த இடம்
ஈ. நெய்தல் – 4. காடும் காடு சார்ந்த இடம்
உ. பாலை – 5. மலையும் மலை சார்ந்த இடம்
72)பொருத்துக
அ. குறிஞ்சி – 1. வைகறை
ஆ. முல்லை – 2. ஏற்பாடு
இ. மருதம் – 3. நண்பகல்
ஈ. நெய்தல் – 4. யாமம்
உ. பாலை – 5. மாலை
73) பொருத்துக.
அ. குறிஞ்சி – 1. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்,
ஆ. முல்லை – 2. இளவேனில், முதுவேனில், பின்பனி
இ. மருதம் – 3. கூதிர், முன்பனி
ஈ. நெய்தல் – 4. கார்
உ. பாலை – 5. கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்
74) திணைக்குரிய உரிப்பொருளைப் பொருத்துக.
அ. குறிஞ்சி – 1. இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
ஆ. முல்லை – 2. புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
இ. மருதம் – 3. இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
ஈ. நெய்தல் – 4. பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
உ. பாலை – 5.ஊடலும் ஊடல் நிமித்தமும்
75) புறத்திணைகளை பன்னிரண்டாகப் பகுத்த நூல் எது?
76) போருக்கான காரணங்களையும், போர் நடைபெறும் முறைகளையும் கூறும் புறத்திணைகள் எத்தனை?
77) மன்னின் வீரம், கொடை, புகழ் முதலானவற்றைச் சிறப்பித்துப் பாடுவது எந்தத் திணை?
78) “விருந்தே தானும் பதுவது புனைந்த யாப்பின் மேற்றே” என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
79) “விருந்து புறத்ததாதத் தான் உண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டாற்பாற் நன்று” – இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
80) “தொல்லோர் சிறப்பின்” என்று விருந்துக்கு அடை கொடுத்துக் கூறியவர் யார்?
81) விருந்தோம்பும் பண்பு, கணவன், மனைவியின் தலையாய கடமை எனக் கூறும் நூல் எது?
82) சங்க காலத் தமிழர்கள் இரவில் வாயில் கதவை அடைக்கும் முன் விருந்தினர் யாரேனும் உள்ளனராக எனப் பார்த்து உணவளிப்பர் என்பதைக் கூறும் நூல் எது?
83) “…………………………..கோவலர்
மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளிச்
செவிஅடை தீர்த் தேக்கிலைப் பகுக்கும்
புல்லி நல் நாட்டு” – இப்பாடல் இடம்பெற்ற நூல்?
84) இரவில் வீட்டிற்கு வரும் விருந்தினர்க்கு எது கலந்த இறைச்சியை சமைத்துக் கொடுப்பது அன்றைய தமிழரின் வழக்கமாகும்?
85) ஒரு நாள் சென்றாலும், இருநாள் சென்றாலும், பல நாள் பலரோடு சென்றாலும், முதல் நாள் போன்றே இன்முகத்துடன் வரவேற்று விருந்தோம்பினர் என்பதை யாருடைய பாடல் மூலம் அறியலாம்?
86) ஆயர்கள், மாடு மேய்க்கப் புறப்படும்போது உணவினை எதில் எடுத்துச் செலவர்?
87) பழந்தமிழர் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளைப் பற்றி கூறும் நூல் எது?
88) பெற்ற பெருவளத்தைத் தக்கோர்க்குப் பகிர்ந்தளிப்பதே வள்ளண்மையாகும். இப்பண்பு, யார் பின்பற்ற வேண்டிய பண்புகளுள் தலையாயது எனக் கருதப்பட்டது?
89) யார் வள்ளல்தன்மை கொண்டவர்களாக விளங்குகின்றனர்?
90) குறுநில மன்னர்கள் மற்றும் அவர்களின் ஆட்சிப் பகுதியை பொருத்துக.
அ. பேகன் – 1. பொதிய
ஆ. பாரி – 2. பழனி மலை
இ. திருமுடிக்காரி – 3. மலையமா நாடு
ஈ. ஆய் ஆண்டிரன் – 4. பறம்பு மலை
91) பொருத்துக.
அ. மயிலுக்குப் போர்வை தந்தவர் – 1. திருமுடிக்காரி
ஆ. முல்லைக் கொடி படர்வதற்குத் தம் தேரை தந்தவர் – 2. பேகன்
இ. குதிரைகளைப் பரிசாக வழங்கியர் – 3. ஆய்
ஈ. நீல நாகத்தின் உடையை இறைவனுக்குப் போர்த்தி மகிழ்ந்தவர் – 4. பாரி
92) எந்த இடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திராவிடர்கள் மிக உயர்ந்த நாகரீகத்துடன் வாழ்ந்தனர்?
93) தமிழகம் இந்தியாவிற்கு வழங்கிய கொடை எனப் போற்றப்படுபவை எவை?
94) எவை பண்பாட்டு மையங்களாகத் திகழ்ந்தன?
95)ஆன்மா லயமாகுமிடங்காளத் திகழ்ந்தவை எவை?
96) சரியான கூற்றைத் தேர்வு செய்க.
97) ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது யாருடைய வாக்கு?
98) தமிழர் வருங்காலச் சந்ததியனருக்கு விட்டுச் சென்றுள்;;ள மிகப் பெரிய பொக்கிஷம் எது?
99) மொழி தோன்றுவதற்கு முன்பே தோன்றிய கலை எது?
100) எந்த நூல் கூத்து வகைகள் பற்றி இயம்புகிறது?
101) ஆடவல்ல நடனமகள் எவ்வாறு அழைக்கப்பட்டார்?
102) பொருத்துக.
அ. வள்ளிக்கூத்து, குன்றக்குரவை – 1. சிவபெருமான்
ஆ. ஆய்ச்சியர் குரவை – 2. முருகன்
இ. குரவைக் கூத்து – 3. திருமால்
ஈ. தாண்டவம் – 4. பெண்கள் கைகோத்தாடுவது
103) இந்தியப் பெருநாட்டிற்கு எந்த கலை ஒரு சிறந்த கொடை என்றால் மிகையாகாது?
104) உயிர்த்தொழில் எனப்படுவது எது?
105) சிற்றில், சிறுபறை, சிறுதேர் போன்றவை யார் விளையாடும் விளையாட்டு?
106) தமிழகத்தில் ‘ஜல்லிக்கட்டு’ எந்த நாளன்று கொண்டாடப்படுகிறது?
107) இந்திரன் எந்நிலக் கடவுள்?
108) இந்திரவிழா சங்க காலத்தில் சிறந்திருந்தது என்பதை எதன் வாயிலாக அறியலாம்?
109) உலகப்பொதுமறை எனப்படுவது எது?
110) சித்த மருத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் யார்?
111) தமிழர்களின் பண்பட்ட உணர்விற்கு சிறந்த எடுத்துக்காட்டு எது?
112) தமிழர்களின் உணர்ச்சியொத்து பழகுதலே—————என்றனர்.
113) தனது உடலிலிருந்து ஒரு முடி விழுந்தாலும், தன் உயிரை விடும் மான் வகை எது?
114) தமிழரின் உயரிய ஒழுக்க நெறி எது?
115) அரிய நெல்லிக்கனியை ஒளவைக்கு வழங்கியவர் யார்?
116) தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான கலை எது?
117) “ஹஸ்தம்” என்பதன் பொருள் என்ன?
118) பரதநாட்டியத்தில் அடவு, அபிநயம் இரண்டிற்கும் முக்கியமானது எது?
119) சரியானதைத் தேர்வு செய்க.
கூற்று: ‘உலகம் என்பது, உயர்ந்தோர் மேற்றே’ எனத் தொல்காப்பியம் கூறுகிறது.
காரணம்: நல்ல வழிமுறைகளைப் பின்பற்றிப் பண்பாட்டில் சிறந்து விளங்குபவர்களே உயர்ந்தவர்கள்
120) சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
121) சோழர்கால கிராம ஆட்சிமுறைப் பற்றி அறிய உதவும் கல்வெட்டு எது?
122) யாழ் மீட்டும் பாணர்களுக்குப் பரிசு வழங்கியவர்
123) மலைவாழ் மக்களுக்கு அனைத்துப் பொருள்களையும் வழங்கியவர்?